மக்கள் நலப் பணியில்
'கவிதை உறவு'
'கவிதை உறவு'
29/12/2015 அன்று ‘கவிதைஉறவு’ சார்பாக சென்னை டாக்டர்
இராதாகிருட்டிணன் நகர் மக்கள், அறந்தாங்கி
வட்டம் மேற்பனைக்காடுகிராம மக்களளாகியோரின் ஒத்துழைப்போடும்
நெல்லை ராஜதீபன் ஜூவல்லரி, டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன்,
‘கவிதைஉறவு’ குமரி மாவட்டக்கிளை,தொழிலதிபர்
கந்தசாமிஆச்சாரி, க.பதி ஆகியோரின்
உதவிகளோடும் வெள்ள துயர்தணிப்புப்பொருட்கள் வழங்கப்பட்டன.தேசியமணி
இல கணேசன், இந்திய ரிசர்வ்
வங்கியின் மண்டல இயக்குனர் டாக்டர்
சதக்கத்துல்லா ஆகியோர் துயர்தணிப்புப்பொருட்களை வழங்கினர்.
எழுத்தால் மட்டுமின்றிச் செயலாலும் மக்கள்
நலன் மேம்படப் பணியாற்றும் கவிதை உறவு ஆசிரியர் கவிஞர் ஏர்வாடி இராதாகிருட்டிணன் அவர்களைப்
பாராட்டுகிறோம்.அவருக்குத் துணைநின்ற எழுத்தாளர்
அமுதா பாலகிருட்டிணன் அவர்களையும் ஏனைய நண்பர்களையும் மனமாரப் பாராட்டுகிறோம்.
No comments:
Post a Comment