Tuesday, December 15, 2015

மருத்துவ மாமணி கண்ணப்பன் விழா



டாக்டர் ஜே.ஜி.கண்ணப்பன் அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, 5ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 2015 டிசம்பர் 13ஆம் தேதி இந்திய அதிகாரிகள் சங்க நூற்றாண்டுவிழா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. முதலில் செல்வி பிரத்திக்ஷா குழுவினர் ‘’குருவின் மகிமை’’ என்ற தலைப்பில் அருமையானதொரு கதை இசைப் பொழிவொன்றை நிகழ்த்தி அனைவரையும் பிரம்மிக்க வைத்தனர்.
     முனைவர் கற்பகம் இறைவணக்கம் பாட டாக்டர் திருச்செல்வம் அவர்கள் அனைவரையும் இனிது வரவேற்றார். டாக்டர் கண்ணப்பன் அவர்களின் அண்ணன் டாக்டர் சண்முகநாதன் அவர்கள் நல்லதொரு தலைமையுரை நிகழ்த்தினார்.  சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் தாண்டவன் அவர்கள் முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்களின் முனைவர்பட்ட ஆய்வு நூலான ‘’மானுட மாண்பு போற்றும் கவிஞர் குலோத்துங்கன்’’ என்ற நூலை வெளியிட தேசியமணி இல.கணேசன் அவர்கள் பெற்று  அருமையானதொரு சிறப்புரை ஆற்றி டாக்டர் கண்ணப்பன், முனைவர் திருமதி வாசுகிகண்ணப்பன் என்ற இனிய இணையரைப்பற்றி  பெருமைபட பேசினார்.
     தேசியமணி இல கணேசன் அவர்கள் டாக்டர் கண்ணப்பன்-வாசுகி அறக்கட்டளையின் 22ஆம் ஆண்டு விருதுகளை வழங்கிச் சிறப்புச் செய்தார். முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு ‘’அறிவியல் தமிழ் ஆதவன்’’ என்றும், குறள்ஞானி மோகனராசு அவர்களுக்கு ‘’திருக்குறள் செவ்வேள்’’ என்றும், டாக்டர் நாகேஷ் அவர்களுக்கு ‘’சிறந்த தடய அறிவியல் அறிஞர்’’ என்றும், வழக்கறிஞர் பாலசீனிவாசன் அவர்களுக்கு ‘’இளையோரைச் செதுக்கும் சிற்பி’’ என்ற விருதகளை வழங்கி, விருதாளர்களையும் டாக்டர் கண்ணப்பன் அவரகளின் குடும்பத்தையும் பெருமைபட வாழ்த்தினார்.           

     அடுத்து, இசைக்கவி இரமணன் அவர்கள் ‘’விதியும், மதியும்’’ என்ற தலைப்பில் அருமையானதொரு டாக்டர் கண்ணப்பன்-வாசுகி அறக்கட்டைளைச் சொற்பொழிவை ஆற்றி அனைவரையும் அசத்தினார். சென்னைப் பல்கலைக் கழக வருகைப் பேராசிரியர் முனைவர் மு.சிவச்சந்திரன் அவர்கள் நூலினைத் திறனாய்வு செய்து மகிழ்வித்தார். விருதுகள் வாங்கினவர்களின் சார்பில் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் ஏற்புரை வழங்கி நன்றி தெரிவித்தார். நிறைவாக முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்கள் நிறைவுரையுடன், நன்றியுரை கூற தமிழ்ப்பண்ணுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.   
          
      மருத்துவர்   திருச்செல்வம் அவர்களின் வரவேற்புரைக்காட்சி




முனைவர் வாசுகி கண்ணப்பன் அவர்களின் ஆய்வுநூல் வெளியீடு

                 
                  குறள்ஞானி மோகனராசர் விருது பெறும் காட்சி
                                         

பெங்களூர்ப் பல்மருத்துவ மேதை நாகேசு விருது பெறும் காட்சி

மறைமலை இலக்குவனார் விருது பெறும் காட்சி



வழக்கறிஞர் பால.சீனிவாசன் விருது பெறுகிறார்


முனைவர் வாசுகி கண்ணப்பன் நன்றி நவிலும் காட்சி

No comments:

Post a Comment